புதுச்சேரி: செல்லிப்பட்டு அரசு பள்ளியில் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கப் பட்டன.
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு, சிட்டுக்குருவிகள் கூண்டுகளை பசுமை இயக்கத்தை சேர்ந்த அருண் மற்றும் சேது சுப்ரமணியன் வழங்கினர்.
தொடர்ந்து, அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பலவிதமான ஆலோசனைகளும் பள்ளி மாணவ - மாணவியருக்கு அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை அனிதா மற்றும் பிற ஆசிரியர்கள் செய்தனர்.