ஊட்டி: மாவட்டத்தில் நடந்த பிளஸ்- 2 தேர்வின் இறுதி நாளில், உயிரியல் பாடத்தில் மொத்தம், 1,389 பேரில், 15 மாணவர்கள்; தாவரவியல் பாடத்தில், 1327 பேரில், 22 பேர்; வரலாறு படத்தில், 256 பேரில், 5 பேர்; பொது இயந்திரவியல் பாடத்தில் 16 பேரில், ஒருவர் வருகை புரியவில்லை.
தனித்தேர்வர்கள் உயிரியல் பாடத்தில், 5 பேரில், ஒருவர்; வரலாறு படத்தில், 18 பேரில், மூவர் என மொத்தம், 43 பேர் வருகை புரியவில்லை.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் பெற்ற, 22 மாணவர்கள். அரசுத்துறையால் வழங்கப்படும் கூடுதல், ஒரு மணி நேரம், சலுகைகள் பெற்று தேர்வு எழுதினர்.மாவட்டத்தில், 41 தேர்வு மையங்களில் பிளஸ்- 2 தேர்வு எழுத தகுதி உடைய பள்ளி மாணவர்கள், 3,128 பேரில், 3085 மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம், 43 மாணவர்கள் வருகை புரியவில்லை.