பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து | Kalvimalar - News

பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்துமார்ச் 25,2024,17:32 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என 10ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனது அருமை மாணவச் செல்வங்களே. ஆல் தி பெஸ்ட். நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.


அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள். 


இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us