விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் 24 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று (மார்ச் 26) முதல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கி ஏப். 8 வரை நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் இருந்து 52 மையங்களில் 10 ஆயிரத்து 719 மாணவர்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் இருந்து 62 மையங்களில் 14 ஆயிரத்து 181 மாணவர்களும் என 114 மையங்களில் 24 ஆயிரத்து 900 பேர் எழுதுகின்றனர். 5 வினாத்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உட்பட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.