தமிழ்நாட்டில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றுவது இன்று பெரிய சிரமமான காரியமல்ல. சிறப்பான மொழித் திறன் பெற்றவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஆசிரியராக நீங்கள் பணியாற்றவே விரும்பினால் பி.எட்., முடிக்கலாம். எம்.ஏ., இந்தியில் சேர்ந்து அதை முடித்துக் கொள்ளலாம். எம்.ஏ., முடித்து விட்டால் நீங்கள் எம்.பில்., படிப்பில் சேர உதவும்.
இந்தி படித்தவருக்கு தனிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நல்ல வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது. மொழி பெயர்ப்பு, பதிப்பு, ஆய்வு மற்றும் அது தொடர்பான வாய்ப்புகளும் கிடைக்கலாம். எனவே அடிப்படையில் உங்களது மொழித் திறனை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதிலும் இந்தியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் நீங்கள் பெறும் திறன்களைப் பொறுத்தே உங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.