தாவரவியலில் பட்ட மேற்படிப்பு முடிப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுற்றுச்சூழலோடு தொடர்புடைய அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், ஆய்வகங்கள், பயோடெக்னாலஜி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், டி.என்.ஏ.வோடு தொடர்புடைய ஆய்வகங்கள், சுற்றுச்சூழல் பதிப்பகங்கள் ஆகியவற்றில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
மேலும் நர்சரிகள், மருந்து நிறுவனங்கள், உணவுத் தொழில் நுட்ப நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பழ வளர்ப்பு நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வேதிப் பொருட்கள் தயாரிப்பகங்கள், பேப்பர் நிறுவனங்கள் மற்றும் பயாலஜிகல் சப்ளை நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம்.
ஐ.சி.ஏ.ஆர்., தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, வனச் சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், பொது நல அமைப்புகள், மருந்துத் தாவர ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றிலும் உங்களுக் கான வேலைகள் உள்ளன. ஏற்கனவே நாம் இப் பகுதியில் அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படிப்பைப் படித்துத் தகுதி பெற்றிருப்பதால் மட்டுமே நமக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அந்தப் படிப்பினால் நீங்கள் பெற்றுள்ள புலத் திறன்கள் மற்றும் அடிப்படையில் உங்களது பொதுவான திறன் ஆகியவற்றைப் பொறுத்துத் தான் நீங்கள் நல்ல வேலையைப் பெற முடியும். எனவே படிப்பில் சேர்ந்ததிலிருந்தே ஒருவர் இவற்றைப் பெற முயற்சிப்பதே பலனளிப்பதாக அமையும்.