இன்றைய இறுக்கமான பொருளாதாரச் சூழலிலும் கூட பொங்கி வளரும் துறையாக இருப்பது நிதித் துறை தான். எம்.பி.ஏ., படிப்பில் நிதிப் பிரிவு படித்து முடிப்பவர்களுக்கு அதிகமாக வேலைகள் கிடைக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றை நேரடி முறையில் படிப்பவர்கள் தான் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இன்றைய போக்கான ஆன்லைன் முறையிலும் இப் படிப்புகளை நீங்கள் படிக்க முடியும். டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு என பல்வேறு படிப்புகள் இதில் உள்ளன.
பி.ஜி., டிப்ளமோ இன் வெல்த் மேனேஜ்மென்ட், பினான்சியல் பிளானிங் அண்ட் வெல்த் மேனேஜ்மென்ட், செக்யூரிடிஸ் அனாலிசிஸ் அண்ட் டிரேடிங் என இவை கிடைக்கின்றன. பிராஜக்ட் பினான்ஸ், பாங்கிங் அண்ட் மேனேஜ்மென்ட், டிப்ளமோ இன் டிரெஷரி, இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிஸ்க் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பாங்கிங், ஸ்டாக் மார்க்கெட், மியூச்சுவல் பண்ட்ஸ் என பல்வேறு சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் இவற்றில் தரப்படுகின்றன. உங்களுக்கான துறை என்ன என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்து பின் சேரலாம்.