என்.ஜி.ஓ.,க்கள், பள்ளிகள் என இன்று குழந்தைகளுக்கான ஆலோசகர்கள் ஏராளமாக தேவைப்படுகின்றனர். ஏற்கனவே இத் துறையில் பணியாற்றுபவர்கள் இன்று இந்த கடுமையான தேவையால் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். ஏற்கனவே இத்துறையில் இது போல பணியாற்றுபவர்களிடம் நீங்கள் நன்றாக விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
எனினும் புதுடில்லியிலுள்ள தேசிய பொதுக் கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மனநல மேம்பாட்டு நிறுவனம் இதில் சிறப்புப் பயிற்சியைத் தருகிறது. இதில் நீங்கள் கண்டிப்பாக சேரலாம். எனினும் இதன் படிப்பில் சேர குறைந்தது 4 ஆண்டுகள் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணியில் இருந்திருப்பது முக்கியம்.