இத்துறையில் ஒருவர் பணியாற்ற விரும்பினால் பட்டப்படிப்பு தகுதி அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. எனினும் சமூக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவருக்கு கள அதிகாரி பணியில் முன்னுரிமை தரப்படுகிறது. இவை தவிர சம்பந்தப்பட்ட கிராமங்களில் பிளஸ் 2 வரை படித்தவரையும் இணைத்து மைக்ரோபைனான்ஸ் பணிகள் நடக்கின்றன.
குஜராத் மாநிலம் ஆனந்திலுள்ள ஐ.ஆர்.எம்.ஏ., புவனேஸ்வரிலுள்ள எக்ஸ்.ஐ.எம்.பி., டில்லி ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க், அகமதாபாத்திலுள்ள என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் ஊரக வளர்ச்சி மேலாண்மை மற்றும் மைக்ரோபைனான்ஸ் படிப்புகள் தரப்படுகின்றன. ஐ.நா.சபையும் இதில் ஆன்லைன் படிப்பு ஒன்றைத் தருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் இத்துறை ஆண்டொன்றுக்கு 300 சதவீத வளர்ச்சியை கண்டுவருகிறது. கிராமங்கள் அதிகமாக இருப்பதாலும் வளரும் பொருளாதாரத்தாலும் இத்துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.