மன அழுத்தத்திற்கு மருந்து | Kalvimalar - News

மன அழுத்தத்திற்கு மருந்து

எழுத்தின் அளவு :

இன்றைய நவீன யுகத்தில், மன அழுத்தம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாராமால் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அன்றாட செயல்பாடுகளில் முடக்கம் ஏற்படுவதோடு, கோபம், எரிச்சல் ஏற்படும். இதைப் போக்க கற்றுக்கொண்டால், மனம் ஒருநிலைப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது. கற்பனையான ஒன்றை நினைத்து, அதன் பக்கம் கவனத்தை திருப்பி, தன்னைத் தானே தளர்வுபடுத்திக்கொள்ளுவதன் மூலம்  மன அழுத்தத்தை தோற்கடிக்கலாம்.

 கற்பனை மூலம் அழுத்தத்தை குறைக்க பயிற்சி எடுக்கும் முறை:

* அமைதியான இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
* அந்த இடத்தில், எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* நீங்கள் தேர்வு செய்த இடத்தில், வசதியாக அமர்ந்தோ, படுத்துக்கொள்ளவோ செய்யுங்கள்.
* கண்களை மூடி, சில முறை ஆழ்ந்து மூச்சை இழுக்கவும்.
* தொடர்ந்து உங்களது கற்பனை உலகத்தை அவிழ்த்து விடவும். நீங்கள் பீச்சில் கற்றுவாங்கியபடி நடந்து வருவது, ஏரியில் மீன் பிடிப்பது, வித்தியாசமான உருவங்கள், வாசனைகள் போன்றவை.
* தொடர்ந்து இப்படி நினைத்த பிறகும், ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் குறையாமல் இருப்பது போல் உணர்ந்தால், சில நிமிடம் ரேடியோவில் பாட்டு கேட்டவாறு மனதில் உருவங்களை கொண்டு வரவும். பின், ஏதேனும் ஒரு உருவத்தையோ, வாசனையையோ நினைத்து, அதன் பக்கம் கவனத்தை திருப்பினால், மன அழுத்தத்தை தோற்கடிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us