தலைப்பு : குழந்தைகளே, கலாமைக் கேளுங்கள்
ஆசிரியர் : ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
மரியாதைக்குரிய ஜனாதிபதி அப்துல் கலாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை சந்தித்து கேள்வி கேட்கச் சொல்லி பதில் அளிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பவர். இந்த கேள்வி - பதில்களை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி தொகுத்து வழங்கியுள்ளார். குழந்தைகளின் கேள்விகளில் ஆர்வத்தின் வெளிப்பாடும், ஜனாதிபதியின் பதில்களில் தெளிவான அறிவுரையும் பளிச்சிடுகின்றன. கலாமின் கவிதை முன்னுரைக்கு முன் நம்மை வரவேற்கிறது. வண்ணப் படங்களுடன் மிக நேர்த்தியாக புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது
விலை: ரூ 95, பக்கம்: 120
வெளியீடு:
தமிழில்: ஜெ.ராதாகிருஷ்ணன்.
நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்.,
41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை-98.