சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் சென்ட் வித்யார்தி என்ற பெயரில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. 16 வயது முதல் 40 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
கல்விக் கடன் தொகை அளவு:
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய முன்தொகை:
நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும்
மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்
கல்வி உதவித்தொகை செலுத்த வேண்டிய முன்தொகையில் சேரும்
வட்டி விகிதம்:
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு: பி.பி.எல்.ஆர்., 2.50%
இதர மாணவர்களுக்கு: பி.பி.எல்.ஆர்., 3.00%
மாணவிகளுக்கு 3.00 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும்.
உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை.
ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.