பொதுவாக பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிப்பவர்களுக்குக் கல்லூரியில் நடத்தப்படும் கம்ப்யூட்டர் பாடங்கள் மட்டுமே வேலையை உறுதி செய்வதாக இருப்பதில்லை. இன்று கல்லூரிகள் அனைத்துமே ஷிப்ட் முறையில் எண்ணற்ற சீட்டுகளை பெரிய தொகைகளுக்காக நிரப்புகின்றன. எனவே இதைப் படிப்பவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் டாலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம். இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி. டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவதாகும்.