எழுத்தின் அளவு :

தொழில்நுட்பம் அல்லது தொழிற்கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணம் நேரடியாக கல்வி மையத்திலும், பராமரிப்புக்கான தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.20,000 அல்லது அதற்கு குறைவாக இருக்கும் தொகை மற்றும் பராமரிப்புச் செலவுக்கு மாதம் 1000 வீதம், வருடத்திற்கு 10,000 அளிக்கப்படும். வீட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் வரையும், பராமரிப்புச் செலவுக்கு வருடத்திற்கு 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது,

பிளஸ் 2 பொதுத் தேர்வு அல்லது இளநிலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து அல்லது தற்போது பயிலும் பட்டப்படிப்பில் சேர எழுதிய நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை அடிப்ப¨யாக வைத்தோ உதவித்தொகைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு எந்த உதவித் தொகையும் பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது. வரும் கல்வியாண்டுகளில் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்து உதவித் தொகை நீடிக்கும்.

இந்தியாவில் தொழிற்கல்வி பயிலும் 20,000 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 767 சிறுபான்மையின மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய http://momascholarship.gov.in/minority_scholarship/internalIndex.jsp இணையதளத்தைப் பார்க்கவும்.

Scholarship :  சிறுபான்மையின மாணவர்களுக்கு தொழிற்கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address :  www.momascholarship.gov.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us