புதியதாக தொடங்கிய எட்டு ஐ.ஐ.டி.,களில் முதலில் தொடங்கப்பட்டது ஐ.ஐ.டி., புவனேஸ்வர். 2008 ஆண்டு ஜூலை 23 ம் தேதி ஐ.ஐ.டி., கராக்பூர் வளாகத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்க ஆண்டில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என மூன்று பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது ஐ.ஐ.டி., புவனேஸ்வர்.
2009 ஆண்டு பிப்ரவரி 12 ம் தேதி ஐ.ஐ.டி., புவனேஸ்வர் க்கு தனி கட்டிடம்
அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரிசா அரசு அளித்த 935 ஏக்கர் நிலப்பரப்பில் ஜட்னி ரயில் நிலைய அருகில் ஐ.ஐ.டி., புவனேஸ்வர் அமைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பி.எச்டி.,
எலக்ட்ரிக்கல் சயின்ஸ்
மெக்கானிக்கல் சயின்ஸ்
பேசிக் சயின்ஸ்
யுமேனிட்டீஸ் மற்றும் சோசியல் சயின்ஸ்
தொடர்பு கொள்ள :
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி , புவனேஸ்வர்
புவனேஸ்வர் 751 013
போன்: 91 674 2301 292
இமெயில்: director@iibbs.ac.in
வெப்சைட்: www.iitbbs.ac.in