அமெரிக்கா, கனடா உட்பட சில நாடுகளில் சட்டம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் எல்சாட் எனும் லா ஸ்கூல் அட்மிஷன் டெஸ்ட் என்ற தேர்வை அவசியம் எழுத வேண்டும்.
முக்கியத்துவம்
கடந்த 1948ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சர்வதேச அளவிலான இத்தேர்வை, லா ஸ்கூல் அட்மிஷன் கவுன்சில் எனும் அமைப்பு, இந்தியாவில் இருக்கும் சில கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்படும் சில கல்வி நிறுவனங்கள், இத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
தேர்வு காலம்:
ஜூன், அக்டோபர், ஜனவரி மற்றும் ஏப்ரல் என இந்த ஆண்டில் நான்கு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
இந்த தேர்வினை எழுத, 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயதுவரம்பு:
வயது வரம்பு இல்லை. ஆனால் சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது வரம்பிற்கேற்க மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
தேர்வு முறை:
தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது இல்லை. அனாலிடிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், ரைட்டிங் மற்றும் ரீடிங் காம்பிரிகென்ஷன் என 4 பிரிவுகளாக நடைபெறும் இத்தேர்வின் ஒவ்வொரு பிரிவிலும், 25 கேள்விகள் கேட்கப்படும். ஒரு பிரிவிற்கு பதிலளிக்க 35 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. பொதுவாக, எழுத்துவழியாக நடைபெறும் இத்தேர்வில் கேட்கப்படும் மல்டிபில் சாய்ஸ் பதிலளிக்க 2.20 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும்.
ஆனால், கொரோனா தொற்று அபாயம் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆன்லைன் வாயிலாகவும் எல்சாட் பிளக்ஸ் எனும் பெயரில் நடத்தப்படும் இத்தேர்விற்கு இடைவெளியுடன் கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், தென் மாநிலங்களில், சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் பொதுவாக இத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக சமீபகாலங்களாக பெரும்பாலும் ஆன்லைன் வாயிலாகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு: www.lsac.org