திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் | Kalvimalar - News

திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்

எழுத்தின் அளவு :

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்த போது முதல் வெற்றி பெற்ற நீங்கள், தற்போது நல்ல வேலையில் சேர்ந்திருப்பதன் மூலமாக இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். கை நிறைய சம்பளம் வாங்கும் போது பெற்றோர்களை மறந்து விடக்கூடாது. தாங்கள் பெறும் சம்பளத்தை பெற்றோர்களிடம் கொடுக்க வேண்டும்.

பொறியியல் படிப்பை முடித்து வேலையில் சேரும் மாணவர்கள், தொலைதூரக் கல்வி மற்றும் இணைய வழிக் கல்வி மூலமாக தங்களது, திறமைகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களது கவனம் தொழிலில் இருக்க வேண்டும். மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது, உங்களது வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us