சி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி?
நவம்பர் 22,2010,00:00 IST
சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. போல சி.எப்.ஏ.,வும் ஒரு சிறப்புப் படிப்பு தான். புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்தபின் இந்திய நிதித் துறை வேகமாக வளர்ந்து வருவதை அறிவோம். இந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள நிதித் துறைக்கு சிறப்பு நிபுணர்கள் பலர் தேவை.
அதைத் தருவதில் சி.எப்.ஏ.,வுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. வர்த்தகத் துறை நிதி, பன்னாட்டு நிதி, முதலீட்டு மேலாண்மை, நிதிச் சேவைகள் என நமது நிதித் துறையில் சி.எப்.ஏ.,வுக்கான தேவைகள் இருக்கும் பிரிவுகள் பல உள்ளன.
பொருளாதாரம், குவான்டிடேடிவ் அனலிசிஸ், பொருளாதாரச் சட்டங்கள், பாதுகாப்பு மறுஆய்வு போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்ட பணிகளை சி.எப்.ஏ.,க்கள் செய்கிறார்கள். மேலும் புராஜக்ட் பிளானிங், மெர்ச்சன்ட் பாங்கிங் சேவை, போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், கிரெடிட் ரேட்டிங் என இவர்களது பணித் தன்மை பரந்துபட்டதாக விளங்குகிறது.