பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா?நவம்பர் 22,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.எஸ்சி., படிப்பதன் மூலமாக மட்டுமே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே போட்டித் தேர்வுகள் எழுதி இன்று அதிகமாக அறிவிக்கப்படும் பாங்குகள் போன்ற பணிக்குச் செல்லலாம் என்பதே பொதுவான அறிவுரை.

எம்.எஸ்சியையும் ஒருவர் சுமாராகப் படித்து 50 முதல் 60 சதவீத மதிப்பெண்களை பாடத்தில் நல்ல திறனில்லாமல் முடிக்கும் போது அதனால் அவருக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. இன்றைய சூழலில் தகுதிகளுக்கு என எந்த வேலையும் கிடையாது. திறன்கள் தான் முக்கியம். பாடத்தில் நல்ல திறனில்லாத போது கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us