கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன. ஜனவரி 11,2011,00:00 IST
முன்பெல்லாம் தென்னிந்தியாவின் 4 மாநிலங்களிலிருந்து 2 அல்லது 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது 2 நகரங்களிலிருந்து கூட 10 பேர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர். ஐ.டி., துறையின் அபார வளர்ச்சிக்குப் பின் பாங்குகளில் பணியாற்ற விரும்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்திருப்பதே இதன் காரணம்.
பி.ஓ., போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் தரம் குறையவில்லை. ஆனால் போட்டியின் கடுமை குறைந்திருக்கிறது. எனவே 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் நண்பர்கள் கூறுவதை நம்பாமல் உடனே உங்கள் இலக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கவும். உறுதியாக வெற்றி கிடைக்கும்.