வி.ஜ.டி. நுழைவுத் தேர்வு
வேலூர்: வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத 30,995 மாணவியர் உள்பட 1,38,008 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேலூர்
: வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத 30,995 மாணவியர் உள்பட 1,38,008 பேர் விண்ணப்பித்துள்ளனர். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 12 பி.டெக். படிப்புகளில் 2,150 இடங்கள் உள்ளன.
இந்த நுழைவுத் தேர்வு எழுத ஆந்திர மாநிலத்திலிருந்து
27,265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து உத்தரபிரதேசத்திலிருந்து 24,867 பேரும் பிகாரிலிருந்து 14,208 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 10,197 பேரும் ஜார்கண்டிலிருந்து 9,378 பேரும் இத்தேர்வு எழுதுகின்றனர் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் தெரிவித்தார்.
விஜடி பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு முடிவுகள் மே
9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக இணைவேந்தர் சேகர் விஸ்வநாதன் தெரிவித்தார்