சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலும் அதன் கல்வி மையங்களிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பட்டப் படிப்புடன் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் பி.எட். படிப்பில் சேர முடியும்.
விவரங்களுக்கு http://www.tnou.ac.in