மெட்ரிக் தேர்வில் 470 மதிப்பெண் எடுத்து காரைக்குடி சுப்பையா அம்பலம் மெட்ரிக்., பள்ளி மாணவி அபிநயா தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3வது இடம்பிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதற்காக அனைத்து பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். தேர்வு பயம் இல்லாததால் மன, உடல் ரீதியாக எவ்வித பாதிப்பும் இல்லை. டியூசன் செல்லாமல் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த பாடத்தை மட்டுமே புரிந்து படித்தேன். முழுமனதுடன் முயற்சி எடுத்து படித்தால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்றார்.