ஆமாம் உண்டு. இதற்கான அறிவிப்பு ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இதை நடத்துகிறது. இதில் தகுதி பெற்றால் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள்/அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.ஆர்க். போன்ற படிப்புகளில் உங்கள் தகுதிக்கேற்ப சேர முடியும்.
வேறு சில தனியார் பல்கலைக்கழகங்களும் சுய நிதிக் கல்லூரிகளும் கூட இதை ஏற்றுக் கொள்கின்றன. தகுதி தரும் படிப்பில் தற்போது இறுதியாண்டு படிப்பவரும் கூட விண்ணப்பிக்கலாம்.
டான்செட் தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்பத்தூர் அரசு தொழில் நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சி பிசப் ஹீபர் கல்லூரி,
திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் நடத்தப்படும். www.annauniv.edu தளத்தில் இதற்குப் பதிவு செய்யலாம்.