எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 488 மார்க் எடுத்து காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.மணிகண்டன் 3வது இடம் பிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை அன்றே தினமே படித்து சுயதேர்வு எழுதுவேன். தேர்வுக்கு 2 மாதத்திற்கு முன்பே அனைத்து பாடத்தையும் முழுமையாக படித்துவிட்டேன். அறிவியலுக்கு முக்கியத்துவம் தந்தேன். உரிய நேரத்தில் பாடங்களை படித்ததால் உடல், மனரீதியாக டென்ஷன் ஏற்படவில்லை. ஆசிரியர்கள் கற்றுத்தந்த பாடத்தை மனதில் பதியும் வரை படிக்கவேண்டும். மனப்பாடம் செய்யாமல் பாடத்தோடு ஒன்றிப்போய் படித்தால் அதிக மார்க் எடுக்கலாம் என்றார். இவர் வருவாய் மாவட்ட அளவிலும் 3வது இடம் பிடித்துள்ளார்.