ஆந்திரா வங்கியில் கல்விக் கடன் ஏ.பி. டாக்டர் பட்டாவி வித்யஜோதி(கல்விக் கடன்) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
வயது:
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு 12 முதல் 30 வயது வரை
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 18 முதல் 35 வயது வரை
கல்விக் கடன் தொகை அளவு:
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய முன்தொகை:
நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்
வட்டி விகிதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: BR+0.75 = 11.50%(Floating) 11.75 %(Fixed)
நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்: BR+0.25 = 11.00 %(Floating) 11.25%(Fixed)
பெண்களுக்கு 2005ம் ஆண்டு ஜூலை முதல் தேதிக்கு பிறகு 0.50 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.
உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: பெற்றோர் உத்தரவாதம்.
நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: பெற்றோர் உத்தரவாதம்.
ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்:சொத்துப்பிணை மற்றும் பெற்றோர் உத்தரவாதம்.