மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் படிப்புகளில் புகழ் பெற்ற நிறுவனமான அரினா அனிமேஷன் கல்வி நிறுவனமும் கோல்கட்டாவிலுள்ள எம்.எஸ்.பல்
கலைக்கழகமும் இணைந்து மல்டிமீடீயா மற்றும் அனிமேஷன் பிரிவுகளில் பி.எஸ்சி., படிப்பைத் தரவுள்ளன.
டிஜிடில் மீடீயா மற்றும் 3டி அனிமேஷனில் அதிநவீன தொழில்நுட்ப உத்திகள் பயன்பட்டு வருவதால் அனிமேஷன் படித்தவருக்கான தேவை கணிசமாக
அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பின் பாடத்திட்டத்தில் அரினா அனிமேஷன் கல்வி நிறுவனத்தின் அனைத்து முக்கிய மாட்யூல்களும் எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் மாட்யூல்களான ஆங்கிலம், 2வது மொழிக்கான விருப்பத்தாள், சாப்ட் ஸ்கில்களில் 2 தாள்கள் ஆகியவை இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனிமேஷன் துறையில் கணிசமான அவுட்சோர்சிங் பணிகளைப் பெற
இந்தியாவிற்கு நல்ல வாய்ப்புகள் பெருகி வருகின்றன.உலகத் தரத்திலான போட்டியைச் சந்திக்கத் தேவைப்படும் திறனை இந்தப் படிப்பின் மூலமாகவும் பயிற்சிகளின் மூலமாகவும் வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 3 ஆண்டு காலத்தில் 90 கிரெடிட்களுடன் இந்தப் பட்டப்படிப்பு நடத்தப்படும் என்றும் ஒருங்கிணைந்த பயிற்சி மாதிரி வழியில் இது நடத்தப்படும என்றும் தெரிகிறது. இந்தப் பட்டப்படிப்பின் தேர்வுகள் அனைத்தும் ஆப்டெக் நிறுவனத்தின் உதவியுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.