மெட்ரிக் தேர்வில் 470 மதிப்பெண்கள் எடுத்து காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., பள்ளி மாணவர் ஜெ.அருண்குமார் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாடங்களை புரிந்து நம்பிக்கையுடன் படித்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். கணக்கு, அறிவியல் மட்டுமின்றி அனைத்து பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். தேர்வை நம்பிக்கையோடு சந்தித்ததால் உடல் மன ரீதியாக டென்ஷன் ஏற்படவில்லை. ஒவ்வொரு பாடத்தையும் புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம் என்றார்.