ஜெயசூர்யா (பிளஸ் 2 தேர்வு - மாநில முதலிடம்) - 2013 | Kalvimalar - News

ஜெயசூர்யா (பிளஸ் 2 தேர்வு - மாநில முதலிடம்) - 2013

எழுத்தின் அளவு :

"பத்தாம் வகுப்பு தேர்வில் தவற விட்டது, பிளஸ் 2 வில் கிடத்தது" என்று பிளஸ் 2 வில் முதலிடம் பிடித்த மாணவர் ஜெயசூர்யா கூறினார். 

நான் 8ம் வகுப்பு முதல், இந்த வித்யவிகாஸ் பள்ளியில், எனது குடும்ப சூழல் காரணமாக, இலவச சலுகையின்கீழ் படித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு தேர்விலேயே, மாநிலத்தில் முதலிடம் வரவேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால், மாவட்டத்தில் மூன்றாமிடம் தான் கிடைத்தது.

எனவே, பிளஸ் 2 தேர்வில், எப்படியும் முதலிடம் பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன். எனக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், எனது தாயார் உள்ளிட்ட பலரும் உதவி புரிந்தனர்.

மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பில் எம்.எஸ்.,ஆர்த்தோ படிக்க விரும்புகிறேன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us