கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷயா, சத்துணவியல் பாடப் பிரிவில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
"மாநில அளவில் சத்துணவியல் பாடப்பிரிவில், முதல் முறையாக 200 மதிப்பெண் பெற்றதில் மகிழ்ச்சி. எனது பெற்றோரும், ஆசிரியை நளினியும் உறுதுணையாக இருந்தனர்.
பிற பாடங்களிலும் கவனம் செலுத்தி, தமிழ் 139, ஆங்கிலம் 170, இயற்பியல் 193, வேதியியல் 196, உயிரியல் 189 என, மொத்தம் 1087 மதிப்பெண் எடுத்துள்ளேன்.
பொழுதுபோக்கை தவிர்த்து, சத்துணவியல் துறையில் முழுமதிப்பெண் வாங்க வேண்டும் எனும் ஆவலில் படித்தேன். அப்பா மனோகர், அம்மா ஆனந்த வித்யா இருவரும் டாக்டராக இருப்பதால், சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதனால், மருத்துவத்தை மேற்படிப்பில் தேர்வு செய்வேன்" என்றார்.