செயல் அனுபவமே பெரிது! | Kalvimalar - News

செயல் அனுபவமே பெரிது!செப்டம்பர் 06,2023,15:06 IST

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெறுவதால் கிடைக்கும் அனுபவத்தைவிட, துவக்கநிலையில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சேருவதால் கிடைக்கப்பெறும் படிப்பினைகளும், தலைமைப் பண்புகளும் அதிகம் என்று தொழில்முனைவோர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.



சமீபத்தில் கொண்டாடப்பட்ட தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு அவர்கள் கூறுகையில், ‘எம்.பி.ஏ., படிப்பு மேலாண்மை திறனை வளர்க்கலாம். ஆனால், ஒரு புதிய நிறுவனத்தை துவங்குவதற்கு அது ஒரு அடிப்படை தகுதி இல்லை. தொழில்முனைவு என்பது நிஜ வாழ்க்கை எம்.பி.ஏ., போன்றது. 



தொழில்முனைவோர், வணிக அடிப்படைகளை உருவாக்கி, தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும், தொழில்முனைவு கற்றுக்கொடுக்கும் நிஜ உலக திறன்களை எம்.பி.ஏ., கற்றுக்கொடுக்காது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us