"டிவி" பார்க்காமல் படித்ததால் சாதித்ததாக கணிப்பொறி அறிவியலில், மாநில இரண்டாமிடம் பெற்ற மாணவி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவி, சாய் லட்சுமி. இவர், பிளஸ் 2வில், கணிப்பொறி அறிவியலில், 200 மதிப்பெண்கள் பெற்று, மாநில இரண்டாமிடம் பிடித்தார். இவர், பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1,181.
இவரே, மாவட்ட அளவில், முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தந்தை, வெங்கடேஸ்வரன், ஓய்வு பெற்ற தனியார் ஆலை அதிகாரி. தாய் மீனாட்சி.
சாய்லட்சுமி கூறும்போது, "சிறுவயது முதலே, அனைத்து வகுப்புகளிலும், முதல் ரேங்க் பெற்றேன். அந்த ஊக்கமே, தற்போதும் ரேங்க் பெற எனக்கு உதவியது. படிப்பை தவிர வேறு சிந்தனை கிடையாது. டிவி பார்க்காமல் படித்ததால், சாதித்தேன்" என்றார்.