எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 496 மார்க் பெற்று, மாநிலத்தில் மூன்றாமிடத்தை மதுக்கூர், காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி பெற்றுள்ளார்.
இவரது தந்தை ரவிக்குமார், தாய் கலையரசி. தந்தை ரவிக்குமார் விவசாயம் செய்து வருகிறார். மதுக்கூரில் வசிக்கின்றனர். வேப்பங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் தாய் கலையரசி ஆசிரியையாக உள்ளார்.
தமிழ்-98, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மொத்த மார்க் 496.
மாணவி சுவாதி கூறுகையில், "மாநிலத்தில் முதலிடம் பெற வேண்டும் என்ற லட்சியத்தில் படித்தேன். ஆனாலும், மூன்றாமிடம் பிடித்துள்ளேன். ப்ளஸ் 2 தேர்வில் நிச்சயம் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பேன். ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ராஜாராம் ஊக்கம் அளித்ததாலும், கடின உழைப்பாலும் பெற முடிந்தது. எதிர்காலத்தில், டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்," என்றார்.