ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 496 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர், தமிழ், 98, ஆங்கிலம், 99, கணிதம், 100, அறிவியல், 100, சமூக அறிவியல், 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இது குறித்து மாணவி காவியா கூறியதாவது: "ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் வசித்து வருகிறோம். தந்தை அருள் பிரகாஷ், வெண்ணந்தூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். தாய் கலைச்செல்வியும், அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.
பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்வதுடன், கவனமாகவும், புரிந்து படிக்க வேண்டும். அதன்படி, பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை புரிந்து, கவனமாகவும் படித்தேன். ஆசிரியர்கள், பெற்றோர் ஒத்துழைப்பால், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடிக்க முடிந்தது. எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவது எனது குறிக்கோள்." இவ்வாறு அவர் கூறினார்.