மரியரஷிகா ஷிவாலி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News

மரியரஷிகா ஷிவாலி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)

எழுத்தின் அளவு :

திருவள்ளூர் மாவட்டம், பண்ணூர் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மாணவி, மரியரஷிகா ஷிவாலி, 10ம் வகுப்பு தேர்வில், 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

இவர், தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100 அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இது குறித்து மாணவி ஷிவாலி கூறுகையில், "எனது சகோதரர் இதே பள்ளியில் படித்து, பள்ளியில் 12ம் வகுப்பில், முதல் மாணவராக வெற்றி பெற்று, இப்போது மருத்துவப் படிப்பு முடித்து, மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

நானும் அவரைப்போல பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். இப்போது பள்ளியில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளேன்," என்றார்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us