மக்கள் சேவையே லட்சியம்! : ராஜலட்சுமி கூறுகையில், "அப்பா மாரியப்பன் தங்கநகை தொழிலாளி. வீட்டில் யாரும் நடுநிலை கல்விக்கு மேல் படிக்காததால், நான் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக ஒத்துழைப்பு கொடுத்தனர். வகுப்பு ஆசிரியர்கள் பாடத்தை தெளிவாக நடத்தியதுடன் தினமும் பயிற்சி கொடுத்தனர். முந்தைய பொதுத்தேர்வு வினாக்களுக்கு பதில் தயாரித்து பயிற்சி எடுத்தது சென்டம் பெற உதவியது. பி.காம். - சி.ஏ. படித்து வேலைக்கு சென்று, குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என்றார்.