எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் போன்ற மத்திய அரசின் வேலை வாய்ப்புப் பத்திரிகைகளில் வெளியாகும் அரசுத் துறைப் பணி வாய்ப்புகளில் கிளார்க், டிரைவர் போன்ற பல பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.
போட்டித் தேர்வுகளுக்கென்று குழு குழுவாக உட்கார்ந்து தயாராகும் நபர்கள் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றனர். பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் தொடங்கி படிப்பு முடித்த மிகச் சில ஆண்டுகளுக்குள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வாய்ப்புகள் என்று ஏதாவது ஒன்றில் வேலை கிடைத்து பணியில் அமரும் நபர்கள் தற்போது டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில் மட்டுமல்லாது பீகார் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றனர்.
போட்டித் தேர்வுக்கு தயாராவது ஒரு புறம் என்றால், இந்தி போன்ற கூடுதல் மொழிகளை அறிவது, ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது என்று இவர்களின் தயாராகும் தன்மையானது பன்முகம் கொண்டதாக இருக்கிறது. வெளியூரில் தான் வேலை என்றாலும்கூட அரசு வேலை என்பதால் தற்போதைய சூழலில் விட முடியுமா?
ராணுவத்தின் மிலிடரி இன்ஜினியரிங் சர்விசஸ் போன்ற பிரிவுகளில் எப்போதும் பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 15 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் என்றால் இவற்றுக்குப் போட்டியிடுபவர் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கலாம். தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் நபர்கள், 10 காலியிடம் தானே உள்ளது, அதுவும் வெளி மாநிலத்தில் தானே உள்ளது என்றெலாம் யோசிக்காமல் உடனே இவற்றுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப தயாராகுங்கள்.
சிறப்பான தகவல் தொடர்புத் திறனும் அடிப்படையில் எங்கும் சென்று பணியாற்றும் ஆர்வமும் இருந்தால் தற்போதைய கடுமையான வேலையில்லாச் சூழலிலும் உங்களுக்கான இடம் காத்திருப்பதை மறந்து விடாதீர்கள். தனியார் துறை வாய்ப்புகள் உங்கள் அருகிலேயே கிடைக்கிறது என்றால் அரசுத் துறை வாய்ப்புகளை நாமாகத் தேடிச் செல்வதே புத்திசாலித்தனம்.