இந்திய மாணவர்கள் இந்தியா அல்லது வெளிநாட்டில் உயர் கல்விப் பெற வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. பணம் இல்லாத காரணத்தால் உயர் கல்வியை யாரும் இழக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதற்கான வழிமுறைகள்
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் வயது வரம்பு - 16 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எந்தெந்த செலவுகளுக்கு கல்விக் கடன் - சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணம், முன்பிணையத் தொகை, புத்தகம் வாங்குதல், பயணச் செலவு.
இந்தியாவில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 10 லட்சம் ரூபாய் வரை.
வெளிநாட்டில் படிக்க வழங்கப்படும் கடன் தொகை - 20 லட்ச ரூபாய் வரை.
கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் - 5 முதல் 7 ஆண்டுகள்.