ஆமாம். முற்றிலும் உண்மை தான். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தான் இன்ஜினியரிங் படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் தான் இன்ஜினியரிங் படிப்பவர் அதிகமாக இருக்கின்றனர். 2004ம் ஆண்டில் இந்தியாவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர் எண்ணிக்கை 1.59 லட்சம்.
இதில் ஆந்திராவில் 22 ஆயிரம் பேர், கர்நாடகாவில் 19.9 ஆயிரம், மகாராஷ்டிராவில் 33 ஆயிரம் பேர் முடித்தனர். தமிழகத்தில் 27 ஆயிரம் பேர் முடித்தனர்.
2005ம் ஆண்டில் இந்தியாவில் இன்ஜினியரிங் முடித்தவர் 2.10 லட்சம். ஆந்திராவில் 34 ஆயிரம், கர்நாடகாவில் 24 ஆயிரம், மகாராஷ்டிராவில் 34.7 ஆயிரம் மற்றும் தமிழகத்தில் 43.6 ஆயிரம் பேர் இதை முடித்தனர். 2006ம் ஆண்டில் இந்தியாவில் இன்ஜினியரிங் முடித்தவர் 2.52 லட்சம். ஆந்திராவில் 48.9 ஆயிரம், கர்நாடகாவில் 27.2 ஆயிரம், மகாராஷ்டிராவில் 36.2 ஆயிரம் மற்றும் தமிழகத்தில் 51.23 ஆயிரம் பேர் இதை முடித்தனர்.
இன்று வங்கிகள், மத்திய அரசுத் துறைகளின் நிர்வாகப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு இன்ஜினியரிங் தகுதியுடையவருக்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதும் ஏனோதானோவென்று படிப்பு முடித்து வரும் மாணவர்களின் தரமும் தான் காரணம்.
ஒரு காலத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., தகுதி பெறுபவர்களைப் போல இன்று பி.இ., பி.டெக்., தகுதி பெறுபவர்களும் எங்கு
பார்த்தாலும் தென்படுகிறார்கள். மேலும் கலை, அறிவியல் கல்லூரிகளை விட அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய ஐ.டி., துறையின் மந்தமான வளர்ச்சி இன்ஜினியரிங் படிப்பவருக்கு ஒரு எச்சரிக்கை மணி.