கோவை: பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியின் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு, ஏப்., 2ம் தேதி முதல் நடக்கிறது.
பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி சார்பில், விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்த பள்ளி மாணவர்களுக்கு இலவசம் மற்றும் சலுகை கட்டணத்தில் கல்லுாரி சேர்க்கை ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு, ஏப்., 2ல் இருந்து 23ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட்பால், கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, கோகோ, இறகுப்பந்து, பாக்ஸிங், செஸ், நீச்சல், வாலிபால், வலுதுாக்குதல், பளுதுாக்குதல், பெஸ்ட் பிசிக், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், மாணவியருக்கு கூடைப்பந்து, டென்னிஸ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, பாக்ஸிங், செஸ், ஹேண்ட்பால், நீச்சல், பளுதுாக்குதல், வலுதுாக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் தேர்வு நடத்தப்படுகின்றன.
ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் http://forms.gle/mZqzmxJqGdeXpJQ58 என்ற லிங்ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
விபரங்களுக்கு: 98655 55599.