விண்ணப்பிக்க தேவையான தகுதி:
அனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு அறக்கட்டளையின் சார்பில் இளநிலை முதலாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ.1100 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தமிழகத்தில் நடந்த பிளஸ்2 அல்லது அதற்கு இணையான தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சியுடன் மொழி பாடத்தில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி) அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.
மேலும் விபரங்களுக்கு சென்னைப் பலகலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணைய தளத்தை காணவும்.