பி.எல்.தினேஷ் (பிளஸ் 2 மாவட்டத்தில் 2ம் இடம்)
எழுத்தின் அளவு :
பிளஸ் 2 தேர்வில், சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி மாணவர் பி.எல்.தினேஷ், 1,175 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-189, ஆங்கிலம்-189, கணிதம்-200, இயற்பியல்-197, வேதியியல்-200, கம்ப்யூட்டர் சயின்ஸ்-200.
அவர் கூறுகையில், பத்தாம் வகுப்பில், மாவட்டத்தில் முதலிடம் பிடிக்க முயற்சித்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இதை லட்சியமாக கொண்டு படித்து, தற்போது முதலிடம் பெற்றேன். பாட புத்தகங்களை முழுவதும் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். முக்கிய கேள்விகளை மட்டும் படிக்கும் பழக்கதை கைவிட வேண்டும். சென்னை எம்.ஐ.டி., யில் ஏரோ நாட்டிக்கல் படிக்க முடிவு செய்துள்ளேன், என்றார்.