இன்ஜினியரிங் தவிர பிற படிப்புகளையும் நமது ஐ.ஐ.டிக்கள் தருகின்றன. ஹியூமானிடிஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகளை இவை தருகின்றன என்பது நமது இளைஞர்கள்
காரக்பூர் ஐ.ஐ.டியில் சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது என்பது கூடுதல் செய்தி. டில்லி ஐ.ஐ.டி. அடுத்ததாக 2 ஆண்டு எம்.ஏ. படிப்பை விரைவில் தொடங்கவுள்ளது. வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் ஆகிய பிரிவுகளில் இந்தப் படிப்பானது தரப்படும்.
இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் சில வகுப்புகளை பி.டெக். மாணவர்களோடு சேர்ந்து படிக்கிறார்கள். காரக்பூர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டிக்களில் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி. படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கும் நுழைவுத் தேர்வு உண்டு. சில ஐ.ஐ.டிக்கள் இவற்றில் பி.எச்டி. படிப்பையும் நடத்துகின்றன. கவுகாத்தியிலுள்ள ஐ.ஐ.டி., தவிர பிற ஐ.ஐ.டிக்களில் மேனேஜ்மென்ட் படிப்புகள் தரப்படுகின்றன. இவற்றில் ஜே.ஈ.ஈ., மூலமாக சேரலாம்.