சுஷ்மிதா (பிளஸ் 2 மாநிலத்தில் முதல் இடம்) - 2012
நாமக்கல்: மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவி சுஷ்மிதா திருப்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை மின்வாரியத்தில் உதவிப்பொறியாளராக உள்ளார்.
மாணவி சுஷ்மிதா இவர் நிருபர்களிடம் பேசுகையில்: நாங்கள் இரவு, பகல் பாராமல் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் இந்த மார்க் வந்துள்ளது. அதிகம் மார்க் வாங்குவேன் என்று காத்திருந்தேன். ஆனால் முதலிடம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆசிரியர்களும், நிர்வாகிகளும் எங்களுக்கு அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த மார்க் பெற முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில் டாக்டராகி கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவையாற்றுவேன் இவ்வாறு சுஷ்மிதா தெரிவித்தார்.