சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி மாணவி செல்வ ஜோதி எடுத்த மொத்த மதிப்பெண்கள்- 1115; தமிழ்-189; ஆங்கிலம்-161; வரலாறு-193; புவியியல் -198; அரசியல் அறிவியல்-178; வணிகவியல்-196
மாணவி செல்வஜோதியின் பெற்றோர் தந்தை டேவிட் முத்துகுமார்; மாற்று திறனாளி; நடைபாதை வியாபாரி, தாய் ராணி; இல்லத்தரசி. வெற்றி குறித்து மாணவி செல்வஜோதி கூறியதாவது:
"ஐ.ஏ.எஸ்., படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது இலக்கு. புவியியல் பாடத்தில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றது மகிழச்சியாக உள்ளது; இதற்காக கடினமாக உழைத்தேன். சிறப்பு வகுப்புக்கள் இந்த சாதனைக்கு பெரும் உதவியாக இருந்தன.
விளையாட்டு துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். எனது சகோதரர், சாலை விபத்தில் இறந்து விட்டார். இந்த சந்தோஷமான தருணத்தில் அவர் இல்லை என்பது வருத்தமாக உள்ளது." என்றார்.