புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் தொழில் முனைவு வணிக கண்காட்சி நடந்தது.
சாரதா கங்காதரன் கல்லுாரியில் ஆண்டுதோறும் தொழில் முனைவு வணிக கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கண்காட்சியினை கல்லுாரி துணை தலைவர் பழனிராஜா துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் உதயசூரியன் தலைமை தாங்கினார்.
கண்காட்சியை இணை பேராசிரியர் சங்கர் ஒருங்கிணைத்தார். பல துறை மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் வணிகவியல் மாணவர் காசிபிரசாத் சிறந்த படைப்புக்காக பரிசுகளை பெற்றார்.