தமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா? | Kalvimalar - News

தமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா? ஜூலை 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயமாக. இதோ நீங்கள் கேட்ட விபரங்கள். தமிழ்நாட்டிலிருந்து இத் தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளவர்கள் இந்த சிறப்புப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சி வகுப்புகள் பொதுவாக டிசம்பர் மாதத்தில் துவங்கி 6 மாத காலம் வரை நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டிருப்பவர்களும் சிவில் சர்விசஸ் முக்கியத் தேர்வு வரை எழுதியிருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.

முழு நேரம் பயிற்சி மையத்திலேயே தங்கிப் படிப்பது, பகுதி நேர மாலை வகுப்புகளில் அங்கே தங்காமலே படிப்பது என 2 வகைகளாக இது நடத்தப்படும். இப்படி இந்த பயிற்சியானது தங்கிப் படிப்பது தங்காமல் படிப்பது என பிரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்கள்: தங்கிப் படிப்பது 42, தங்காமல் படிப்பது 21.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்: தங்கிப் படிப்பது தலா 6 மற்றும் தங்காமல் படிப்பது தலா 3.

மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் டீநோட்டிபைட் பிரிவினர்: தங்கிப் படிப்பது 36 மற்றும் தங்காமல் படிப்பது 18.

பிற சமூகத்தினர்: தங்கிப் படிப்பது 10 மற்றும் தங்காமல் படிப்பது 5.

தாழ்த்தப்பட்டவர்: தங்கிப் படிப்பது 98 தங்காமல் படிப்பது 49.

எஸ்.டி. தங்கிப்படிப்பது 2 மற்றும் தங்காமல் படிப்பது 1.

தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பிறர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்
பொதுப் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். பிறருக்குக் கட்டணம் இல்லை. எனினும் இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். அதற்கு மேலிருப்பவர்கள் மாதக் கட்டணம் கொஞ்சம் செலுத்த வேண்டும். பகுதி நேரப் பயிற்சியில் சேருவோருக்கு விடுதி வசதி கிடையாது. விருப்பப் பாடத்தில் பயிற்சிக்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பகுதி நேர வகுப்புகள் மாலை 6.30லிருந்து 8.30வரை மட்டுமே நடத்தப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதியானது பொது நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இத் தேர்வானது சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடத்தப்படும்.
இத் தேர்வானது அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் இந்திய அரசியல், பொருளாதாரம், புவியியல், பொது அறிவியல் மற்றும் நடப்புச் செய்திகள் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும். இத் தேர்வானது நவம்பரில் நடத்தப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை
முழு விபரங்களையும் படிவத்தையும் http://www.civilservicecoaching.com என்னும் இணைய தளத்திலிருந்து பெறலாம். தகுதிகள், கட்டணங்கள், விடுதி வசதி போன்ற அனைத்து விபரங்களையும் இத் தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். விண்ணப்பத்துடன் ஜாதி, பட்டப்படிப்பு ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி
Director and Director General of Training Anna
Institute of Management, Chennai  600 028. 
தொலைபேசி எண்கள்: 044  26211475, 26211909

பொதுவாக செப்டம்பர் மாதத்தில் இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் நிர்ணயிக்கப்படுவதால், தொடர்ந்து இது குறித்த அறிவிப்புக்காகக் காத்திருக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us