இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இந்தோ-ஈரானிய துணைப்பிரிவைச் சேர்ந்தது உருது மொழி. பாகிஸ்தானில் ஆட்சி மொழியான உருது, இந்தியாவில் 1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். அரபு மொழியின் சில மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் எழுதப்படும் இம்மொழி, அடிப்படையில் இந்தோ மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அரபு மொழி மற்றும் பாரசீக மொழியிலிருந்து ஏராளமான சொற்களை கடன் பெற்று வளர்ச்சியடைந்தது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 10 கோடி மக்கள் உருது மொழியை அறிந்துள்ளனர். உருது படிக்க விரும்புபவர்களுக்காக சான்றிதழ் படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.