டெக்ஸ்டைல் துறையில் புதிய தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தும் இன்ஜினியரிங் துறையே டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறையாகும். இதனை டெக்ஸ்டைல் டெக்னாலஜி எனவும் அழைப்பார்கள். நூலிழைகள் தயாரிப்பிற்கு பயன்படும் பாலிமர்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை முற்றிலும் ஆராய்ந்து அதை பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்த படிப்பில் கற்கலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும் துறை டெக்ஸ்டைல் தான். இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறிவிடுகிறது. இதனால் தான் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் சரி டெக்ஸ்டைல் பொருட்கள் கடுமையான முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன.
ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் உற்பத்தி, டெக்ஸ்டைல் பாகங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை, தரத்தை நிர்ணயித்தல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது. இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் டிசைன்ஸ், வேதியியல் வினைகள், எந்திர வடிவமைப்பு, டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகள் இத்துறையில் கீழ் கற்றுத்தரப்படுகின்றன.
பயிலும் நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., டில்லி
* பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
* குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
* பாவேந்தர் பாரதிதாசன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி
* டெக்னாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்ஸ்டைல் , அரியானா
* ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
வேலைவாய்ப்பு
இத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாடுகளில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. உள்நாடுகளில் துவக்கத்திலேயே ரூ.8,000 முதல் ரூ.10,000 முடிய ஊதியமாக அளிக்கப்படுகிறது. அனுபவம் பெற்றவர்களுக்கு ரூ.20,000 சம்பளம் கிடைக்கும்.