ஹரித்வாரில் உள்ள குருகுல காங்ரி விஷ்வவித்யாலயாவில் மிகவும் பழமையான பாடப்பிரிவு என்ற பெருமையை பெற்றது பி.ஏ. (அலஙகார்) வேதா.
நம் நாட்டின் வேதங்களையும், வேத இலக்கியங்களையும் பற்றிய பாடங்கள் அடங்கியதே இந்த பட்டப்படிப்பாகும். இந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் பலரும் தற்போது, நாட்டிற்காக பாடுபடும் வீரர்களாகவும், எழுத்தாளர்களாகவும், செய்தியாளர்களாகவும், தலைவர்களாகவும், சிறந்த கல்வியாளர்களாகவும் விளங்குகின்றனர்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பட்டப்படிப்பில் சேரலாம். 3 ஆண்டுகள் கொண்ட இந்த பட்டப்படிப்பை முடித்து முதுகலை பட்டப்படிப்பும் படிக்கலாம்.